Friday, June 26, 2009

பொன்னிற இறால் வருவல்





தேவையான பொருட்கள்
1. பெரிய இறால் - 300 கிராம்.
2. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
3. மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
4. மஞ்ச்ள் தூள் - 1/4 தேக்கரண்டி
5. கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
6. கிரீன் சில்லி ஸாஸ் - 2 தேக்கரண்டி
7. வினிகர்
8. கலர் பவுடர் - 1 சிட்டிகை
9. கார்ன் ஃப்ளோர் - 3 மேஜை கரண்டி
10. அரிசி மாவு - 2 தேக்கரண்டி
11.கருவேப்பிலை
12. பச்சை மிளகாய் - 3 (நடுவில் பிளக்கப்பட்டது)
13. எண்ணெய்
14. உப்பு

செய்முறை
சுத்தம் செய்யப்பட்ட இறாலை இஞ்சி பூண்டு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், கிரீன் சில்லி ஸாஸ், கலர் பவுடர், வினிகர், உப்பு, சிறிது எண்ணெய் சேர்த்து, ஒரு மனி நேரம் மாரினேட் செய்யவும்.
ஒரு வானலியில் எண்ணெய் ஊற்றி, பச்சை மிளகாய், கருவெப்பிலை நன்றக பொரித்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
மாரினெட் செய்யப்பட்ட இறாலை கார்ன் ஃப்ளோர் மற்றும் அரிசி மாவில் நன்றாக பிரட்டி ஒவ்வொன்றாக பொன்னிறகமாக வரும் வரை பொரித்து எடுக்கவும்.
பொரித்து வைக்கப்பட்ட கருவெப்பிலை, பச்சை மிளகாயுடன் அலங்கரித்து பரிமாறவும்..

3 comments: